திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு கலைஞர் நகரில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் குடிநீர் கழிவுநீர் என எந்த அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்யப்பப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் கலைஞர் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீருடன் மலை நீர் சேர்ந்து வீடுகளில் புகுந்தது. அதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆனார்கள். இந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று சேலத்தில் இருந்து திருப்பத்தூர் வரும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விரைந்து வந்த நகர காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment