ஏலகிரி மலை பகுதியில் உள்ள அரசு பல்வேறு துறைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 January 2024

ஏலகிரி மலை பகுதியில் உள்ள அரசு பல்வேறு துறைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்டத்தின் 4-வது மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஏலகிரி மலை அத்தனாவூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 

அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சத்துணவு கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மாணவர்கள் வருகை பதிவு 270 ஆனால் முட்டை 150 மட்டுமே அவிக்கப்பட்டது.  குறைவாக வைக்கப்பட்டதால் சத்துணவு அமைப்பாளருக்கு டோஸ் விட்டார். வேளாண்மைதுறை குடோனில் ஆய்வு செய்த பிறகு, நியாயவிலை கடையும் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவிகளின் படிப்பு திறனை ஆய்வு செய்தார். 


முடிவாக கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார், இன்றும் நாளையும், ஏலகிரி மலை பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்வார் என்பது குறிப்பிடதக்கது. இன்றும்‌நாளையும் ஏலகிரி இரண்டு நாட்கள் ஆய்வு.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/