திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் இரண்டாவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 8லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்க 6.3.24 புதன்கிழமையான இன்று காலை 10 மணியளவில் பூமி பூஜை போட்டு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், இரண்டாவது வார்டு கவுன்சிலர் குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரகுநாத் மற்றும் அரசு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment