பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் வாணியம்பாடியில் உள்ள மாவட்ட அலுவகத்தில் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, மாவட்ட அணிகளின் து.அமைப்பாளர்கள் ரஜினி, சக்கரவர்த்தி, பார்த்திபன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment