சங்க பாதுகாப்பு, பணி பாதுகாப்பு, ESI EPF பதவி உயர்வு, வாரிசு வேலை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பாரத இயக்க வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊராட்சி சுகாதார ஊக்குனர்களுக்கு ஊதியம் வழங்கும் தேதி உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் ஊதியம் உரிய தேதியில் வழங்கப்பட வேண்டும். வெளி முகமை மூலம் ஊதியம் வழங்குவதை தடுத்து நிறுத்தி விரைய செலவுகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசாணை GO. 2 டி மற்றும் 62DT இன் படி மாதம் ரூபாய் 18000 குறைந்தபட்ச சம்பளமாக வழங்க வேண்டும்.
தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் கேட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment