திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர். ஏ. வ.வேலு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 April 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர். ஏ. வ.வேலு.

திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட ஆறு பகுதியில் ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில் பொன்னேரி சூரியகுமார் உமா கண்ணுறங்கம், சிங்காரவேலன், புதுப்பேட்டை பகுதியில் சத்யா, சதீஷ் மற்றும் கவிதா தண்டபாணி, கந்திலி பகுதியில் அசோக் குமார், காக்கங்கரை பகுதியில்  முருகேசன், வெங்கலாபுரம் பகுதியில் மோகன்ராஜ், திருப்பத்தூர் நகரப் பகுதியில் எஸ்.ராஜேந்திரன் தலைமையிலும் சுமார் ஒவ்வொரு இடங்களிலும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பரப்புரையில் கலந்து கொண்டனர்.

இதில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.தேவராஜ்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். A நல்லதம்பி கலந்து கொண்டனர்.  பிரச்சாரத்தில்.பேசிய அமைச்சர் ஏ.வா வேலு. திமுக.நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாதுரைக்கு  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்து கூறி பொது மக்களுக்கு நலதிட்டங்களை செய்ததை பொதுமக்களுக்கு கூறி திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், பிஜேபி ஆட்சி இருந்தால் தமிழ்நாட்டை விற்று விடுவார்கள் எனவும் இந்தியா கூட்டணி கட்சிக்கு வாக்களியுங்கள், முதல்வர் மு க ஸ்டாலின் பெண்களுக்காகவே பல நல திட்டங்கள். செய்து வருகிறார் என ஏ.வ.வேலு  பேசினார்.


மேலும், இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் போதும்மக்களுக்கு கிடைக்கும் நல திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி மற்றும் மாணவரணி மற்றும் திமுகவினர், பொதுமக்கள் பலர் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad