இந்தியா கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரு டி.எம்.கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், கொத்தகோட்டை ஊராட்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் அவர்கள் ஏற்பாட்டில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு, ஒன்றிய துணை செயலாளர் அம்சா, மு.ஊராட்சி மன்ற தலைவர் கணபதி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் கோபிநாத்
No comments:
Post a Comment