மனிதநேய மக்கள் கட்சி" யின் சார்பில் வாக்கு சேகரிப்பு திமுக வேட்பாளர் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் சி என் அண்ணாதுரையை ஆதரித்து திருப்பத்தூர் நகரில் உள்ள 8, 9, 10 ஆகிய வார்டுகளில் உதயசூரியன் சின்னத்தில் "மமக" சார்பில் இன்று வாக்கு சேகரிக்கப்பட்டது.
இதில் மதிமுக நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் A.நல்லதம்பி, தேர்தல் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் வசந்த்குமார், நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், துணை தலைவர் A.R.ஷபியுல்லாஹ், முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு சந்திரசேகர், C.K.சனாவுல்லா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்..
மமக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டு வார்டு வாரியாக உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் மற்றும் வீடுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment