வருவாய் கோட்டாட்சியர் அலுவலக குடோனில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பகுதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 18 April 2024

வருவாய் கோட்டாட்சியர் அலுவலக குடோனில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பகுதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. எனவே நாளை நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 267 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் தலைமையில் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.


இதில் திருப்பத்தூர் மாவட்ட மண்டல பொறுப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  பாதுகாப்பாக அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad