திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 April 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடியாசைத்து துவக்கி வைத்து சிறிது தூரம் மாணவர்களுடன் ஓடினார்.

இந்த மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தொடங்கி பாச்சல் கிராமம் வரை சென்று திரும்பும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவு அடைந்தது, அதனைத் தொடர்ந்து இதில் கலந்துகொண்ட வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட துறைச் சார்ந்த அதிகாரிகள் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad