கந்திலி ஒன்றியம் காக்கங்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் ஊரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை மாற்றக்கோரி சுந்தரம்பள்ளி மின் பகிர்மான இளநிலை பொறியாளர் அவர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சுந்தரம் பள்ளி மின் பகிர்மான அலுவலக அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த சாலை ஊரின் பிரதான சாலையாகும். இந்தசாலை வழியே பொதுமக்களும், சுமார் 50 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மேலும் இந்த வழியாகத்தான் பள்ளி வேன் உட்பட்ட அனைத்து வாகனங்களும் சென்று வர வேண்டும். இந்த மின் கம்பிகள் பள்ளி வேன்களுக்கு உரசும் படியாக கீழே தொங்கும் படி அமைந்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக புதிய மின் கம்பங்களை மாற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment