உலக பட்டினிதினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வி சி முனிசாமி தலைமையில் நடைப்பெற்றது.
உலகம் முழுவதும் மே 28ம் தேதி பட்டினி தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், கட்சி ஆலோசனைப்படி, பொதுமக்களுக்கு உணவு வழங்க உத்தரவிட்டதின் பேரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஒன்றிய, நகர,கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் என திராளானோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர். மோ.அண்ணா மலை.
No comments:
Post a Comment