நேற்று நண்பகல் 12 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட நிறைகள் குறைகள் பற்றி கூறினர், மேலும் ஜோலார்பேட்டை நகர பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது எனவும் குற்றச்சாட்டினர், மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை நகரமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கூட்டத்தில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் கோபிநாத் .
No comments:
Post a Comment