எலவம்பட்டி பகுதியில் நில சம்பந்தமான பிரச்சினையில் வாலிபர்களுக்கு மண்டை உடைப்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

எலவம்பட்டி பகுதியில் நில சம்பந்தமான பிரச்சினையில் வாலிபர்களுக்கு மண்டை உடைப்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் ( 49) இவருக்கு சொந்தமாக எலவம்பட்டி பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் அளவிலான பூர்வீக சொத்து உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த நிலத்தில் கீரை பயிரிட்டுள்ளார் அதனை அறுவடை செய்ய சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இந்த சொத்து தனக்கு சொந்தம் எனக் கூறி சம்சுதீனிடம் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.


இதன் காரணமாக சதீஷ் உறவினர்கள் ரகு மற்றும் பிரேம் மற்றும் 15 பேர் கொண்ட குழுவினர் திடீரென சம்சுதீனை தாக்கியுள்ளனர், இதுகுறித்து சம்சுதீன் தனது மகனான சபீர் வயது 20 என்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் சபீர் மற்றும் அவருடைய நண்பரான நாகராஜன் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென சபீர் மற்றும் நாகராஜன் இருவரையும் சாரா மாறியாக தாக்கியுள்ளனர் இதன் காரணமாக இருவருக்கும் மண்டை உடைந்துள்ளது. 


இந்த நிலையில் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இருவரும் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/