தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை பிடிபட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை பிடிபட்டது.

திருப்பத்தூரில் தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தையை 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்த நிலையில் வீட்டிலிருந்து சிறுத்தை அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியது அப்போது அங்கிருந்த வர்ணம் பூசும் தொழிலாளி கோபால் என்பவரின் தலையில் தாக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பை தீவிரபடுத்த காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினர்


மேலும் அருகே CIC, YMCA தோன்மிக்சாவியோ, உள்ளிட்ட பள்ளிகள் உள்ளதால் பள்ளியில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே விடாமல் பள்ளியிலேயே வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தை தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தாவி அங்குள்ள கார் பார்க்கிங்கில் பதுங்கியதால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை மற்றும் காவல் துறையினர் திணறி வந்தனர். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் சிறுத்தை பதுங்கி இருந்த கார் பார்க்கிங்கில் இரண்டு கார்களில் பாஸ்கர் இம்ரான் ,தினகரன், சாமிஜி ,எம் ஜி ஆர் உள்ளிட்ட ,ஐந்து பேர் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஏணி மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.


மேலும்  சிறுத்தையை பிடிக்க தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வனவிலங்கு மருத்துவ குழு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும் வேலூர் மண்டல வன பாதுகாவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டனர் இருப்பினும் பல்வேறு கட்ட முயற்சியில் ஈடுபட்டும் சிறுத்தை பிடிக்க முடியாததால் விடிய விடிய சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் பின்னர் பிடிபட்ட சிறுத்தை ஆண் சிறுத்தை எனவும் சுமார் நான்கு வயது இருக்கலாம் என தெரிவித்த வேலூர் மண்டல வன பாதுகாவலர் சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து பாதுகாப்பாக காப்பு ஓசூர் காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக தெரிவித்தார்.


திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில்  உள்ள கார்பார்க்கிங்கில்  பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்


மேலும் திருப்பத்தூர் நகர பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டத்தால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்ததால் நகரப் பகுதி முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது..


- மாவட்ட செய்தியாளர்  மோ.அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/