சந்திரபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 July 2024

சந்திரபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இதில் மங்கல இசை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மற்றும் புதிய கோபுர கலசம் வைத்தல், மகபூர்ண விதி, காலயாக பூஜை, தம்பதிகள் சங்கல்பம், அலங்காரம் தீபாராதனை, உங்கிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் கோபுரத்தின் மேலே கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி பின்னர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது, இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்பி பெரியாண்டவரை வழங்கினர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/